Thursday 13 June 2019

ஒப்பந்த ஊழியர்களை குறைக்காதே! அவர்களின் ஊதியத்தை உடனே வழங்கு! BSNL ஊழியர் சங்கம் கோரிக்கை :

12.06.2019 அன்று BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் P.அபிமன்யு அவர்களும் துணை பொதுச்செயலாளர் தோழர் சுவபன் சக்கரவர்த்தி அவர்களும், DIRECTOR(FINANCE) திரு S.K.குப்தா அவர்களை சந்தித்து கீழ்கண்ட விஷயங்களை விவாதித்தனர். 
1) ஒப்பந்த ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க மாநிலங்களுக்கு கார்ப்பரேட் அலுவலகம் வெளியிட்டுள்ள உத்தரவு
2) மாதக்கணக்கில் ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாதது.
ஒப்பந்த ஊழியர்களுக்கு தரவேண்டிய ஊதிய பாக்கிக்கான நிதியை விரைவில் ஒதுக்க வேண்டும் என நமது தலைவர்கள் வலியுறுத்தினர். மேலும் ஒப்பந்த ஊழியர்களின் எண்ணிக்கையை குறைப்பது பராமரிப்பு பணிகளை கடுமையாக பாதிக்கும் என்றும் சுட்டிக்காட்டினர்.
அதற்கு பதிலளித்த DIRECTOR(FINANCE) BSNLன் நிதி நிலை மிகவும் மோசமாக உள்ளது என்றும் நிதி இருப்பை பொறுத்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார். மேலும் நிறுவனத்தின் நிதி நிலைமை மோசமாக உள்ள காரணத்தினாலேயே ஒப்பந்த ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டிய நிர்பந்தம் வேறு வழியின்றி ஏற்ப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இருந்த போதிலும் இந்த முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என நமது தலைவர்கள் DIRECTOR (FINANCE) அவர்களிடம் வற்புறுத்தி உள்ளனர்.