ஒப்பந்த ஊழியர்களுக்கு பல இடங்களில் கடந்த நான்கு மாத ஊதியம் நிலுவையில் உள்ளது. காரணம் கேட்டால் நிதி இல்லை என்கிற பதில் தான் வருகிறது. பதில் பசியை போக்காது. உடனடியாக ஊதியம் வேண்டும் என வலியுறுத்தி 08.05.2019 அன்று மாவட்டங்களில் மாவட்ட பொது மேலாளர்களிடம் முறையீடு செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதில் நமது BSNL ஊழியர் சங்க தோழர்களும் பெருமளவில் பங்கேற்க வேண்டும். அதன் பின்னரும் ஊதியம் தரப்படவில்லை எனில் 13.05.2019 முதல் TNTCWU மற்றும் BSNLEU மாநில சங்க நிர்வாகிகள் பங்கேற்கும் மூன்று நாட்கள் உண்ணாவிரத போராட்டம் சென்னை தலைமை பொது மேலாளர் அலுவலகத்தில் நடைபெறும். மூன்றாம் நாளான 15.05.2019 அன்று தமிழகம் முழுவதும் இருந்து திரளும் நிரந்தர, ஒப்பந்த மற்றும் ஓய்வு பெற்ற தோழர்களும் பங்கேற்கும் பிரமாண்டமான பெருந்திரள் உண்ணாவிரத போராட்டமாக நடைபெறும். எனவே 13.05.2019 முதல் நமது மாநில சங்க நிர்வாகிகளும், 15.05.2019 அன்று நமது அனைத்து தோழர்களும் சென்னையை நோக்கி திரண்டு வரவேண்டுமென தோழமையுடன் தமிழ் மாநில சங்கம் கேட்டுக் கொள்கிறது.