BSNL நிறுவனம் இன்னமும் ஏன் 4G சேவை வழங்கவில்லை என தொலை தொடர்பு துறைக்கு சென்னை உயர்நீதி மன்றத்தின் மதுரை அமர்வு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தை சார்ந்த வெங்கடேஷ் என்பவர் இதற்கு மனு தாக்கல் செய்துள்ளார். அனைத்து தனியார் நிறுவனங்களும் 4G சேவையை துவங்கி விட்ட பின்னரும் BSNLக்கு ஏன் இன்னமும் இந்த சேவை வழங்கப்படவில்லை. BSNL இன்னமும் 4G சேவை தராமல் காலம் தாழ்த்துவதால், தனியார் நிறுவனங்கள் ஆதாயம் பெறுகிறார்கள் என்றும் மனுதாரர் தெரிவித்துள்ளார். எனவே உயர் நீதிமன்றம் BSNL நிறுவனம் விரைவில் 4G சேவையை துவங்கிட அரசிற்கும், BSNL நிறுவனத்திற்கும் உத்தரவிட வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டுள்ளார். மனுதாரரின் முயற்சிக்கு BSNL ஊழியர் சங்கம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது