Wednesday 1 May 2019

8வது உறுப்பினர் சரி பார்ப்பு :

பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதை ஒட்டி BSNL நிர்வாகம் 8வது உறுப்பினர் சரி பார்ப்பு தேர்தலை தள்ளி வைத்து 18.03.2019 அன்று ஒரு கடிதம் வெளியிட்டிருந்தது. நிறுவனத்தின் நிலையை கணக்கில் கொண்டு 8வது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தலை BSNL நிர்வாகம், மேலும் 6 மாத காலத்திற்கு ஒத்தி வைக்கலாம். 23.04.2019 அன்று BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் P.அபிமன்யு அவர்களும், தோழர் சுவபன் சக்கரவர்த்தி Dy.GS அவர்களும் GM(SR) திரு A.M.குப்தா அவர்களை சந்தித்து உரையாடிய போது அவர்களால் அதனை புரிந்துக் கொள்ள முடிந்திருக்கிறது. இதனை முன்கூட்டியே அனுமானித்த BSNL ஊழியர் சங்கம் தனது காசியாபாத் மத்திய செயற்குழுவில், இது போன்ற ஒரு நிலை ஏற்பட்டது என்றால் மத்திய செயற்குழு உறுப்பினர்களின் கருத்துக்களை அப்போது கேட்டு அகில இந்திய மையக் கூட்டம் முடிவு செய்யலாம் என முடிவெடுத்திருந்தது. 
24.04.2019 அன்று நடைபெற்ற BSNL ஊழியர் சங்கத்தின் அகில இந்திய மையக் கூட்டத்தில் நிர்வாகத்தின் இந்த முன்மொழிவு தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இறுதியில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்தவுடன் 8வது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தல் நடைபெற வேண்டும் என அந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. நிதி நிலையை காரணம் காட்டி உறுப்பினர் சரி பார்ப்பு தேர்தலை ஒத்தி வைப்பதை நாம் ஏற்றுக் கொள்ளக் கூடாது. ஊதிய மாற்றம், ஓய்வூதிய மாற்றம் மற்றும் BSNLன் பொருளாதார புத்தாக்கம் ஆகிய முக்கியமான விஷயங்கள் தொடர்பாக புதிய அரசாங்கத்திடம் வலுவாக வாதிட தொழிற்சங்க அங்கீகாரம் மிக மிக முக்கியமான விஷயம். எனினும் மத்திய சங்கம் மத்திய செயற்குழு உறுப்பினர்களின் கருத்துக்களை கோரியுள்ளது. வந்தவுடன் அதற்கேற்ப நிர்வாகத்திற்கு கடிதம் வழங்கப்படும்.