Sunday 14 April 2019

மத்திய அரசின் கொள்கைகள் தான் BSNLன் சிக்கலுக்கு காரணம்

சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் அதிகார பூர்வ செய்தி தொடர்பாளர் திரு ரந்தீப் சிங் சுர்ஜேவாலா BSNL தற்போது சந்திக்கும் பிரச்சனைகளுக்கு மத்திய மோடி அரசாங்கம் தான் காரணம் என குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு பதிலளித்த மத்திய தொலை தொடர்பு அமைச்சர் திரு மனோஜ் சின்ஹா அவர்கள், UPA அரசாங்கத்தின் காலத்தில் எடுகப்பட்ட முடிவுகள் காரணமாகவே BSNL நிதி நெருக்கடியை சந்தித்தது என்று கூறியுள்ளார். திரு மனோஜ் சின்ஹா அவர்கள் கூறியுள்ளது சரிதான். அதே சமயம், ரந்தீர்சிங் சுர்ஜேவாலா கூரி இருப்பதும் மிகச் சரியானது தான். தொடர்ச்சியாக மத்தியில் உள்ள அரசாங்கங்களின் மக்கள் விரோத கொள்கைகள் தான் BSNLன் தற்போதைய நிதி நெருக்கடிக்கு காரணம் என AUAB தொடர்ச்சியாக கூறி வருகிறது. BSNLன் தற்போதைய நிதி நெருக்கடிக்கு ஊழியர்கள் எந்த வகையிலும் காரணம் இல்லை என AUAB தொடர்ச்சியாக கூறி வருகிறது. தற்போது ரந்தீப் சிங் சுர்ஜேவாலா மற்றும் திரு மனோஜ் சின்ஹா ஆகியோர் கூறியுள்ளது நமது கூற்றை நிரூபித்துள்ளது.