Monday 18 February 2019

வேலை நிறுத்தம் வெற்றியுடன் துவங்கியது

BSNL நிறுவனத்தை காப்பாற்றுவதற்காகவும், ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் நியாயமான கோரிக்கைகளை முன்வைத்தும் AUAB விடுத்த மூன்று நாட்கள் வேலைநிறுத்தம், நாடு முழுவதும் எழுச்சியுடன்  வெற்றியுடன் துவங்கியுள்ளது. வேலூரில் மொத்தமுள்ள ஊழியர்களின் 95%க்கும் மேற்பட்ட ஊழியர்களும் அதிகாரிகளும், இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர். ஒட்டு மொத்தமாக வேலூரில் 99%க்கும் அதிகமான வாடிக்கையாளர் சேவை மையங்களூம், தொலைபேசி நிலையங்களும், அலுவலகங்களூம் மூடப்பட்டன . முதன்மை பொது மேலாளர் அலுவலகம் மற்றும் அனைத்து  கிளை அலுவலகம்முன்பு ஆர்ப்பாட்டங்களும், காஷ்மீரில் படுகொலை செய்யப்பட்ட CRPF வீரர்களுக்கு அஞ்சலிக் கூட்டமும் நடைபெற்றுள்ளது. இந்த போராட்டம் வருகின்ற இரண்டு நாட்களும் தொய்வின்றி இன்னமும் அதிக வேகத்தில் நடைபெற உறுதியுடன் செயல்படுவோம். நமது கோரிக்கைகளை வென்றடைவோம்.