கனரா வங்கி மற்றும் யூனியன் வங்கி ஆகியவற்றோடு ஊழியர்களுக்கு கடன் வழங்க போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் காலாவதியாகி போனதை தொடர்ந்து அவற்றை புதுப்பிக்க வேண்டும் என BSNL ஊழியர் சங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வந்துக் கொண்டுள்ளது. 25.04.2019 அன்றும் இந்த விஷயத்தை கார்ப்பரேட் அலுவலகத்தில் உள்ள DGM(Banking) அவர்களிடம் விவாதிக்கப்பட்டது. கார்ப்பரேட் அலுவலகம் அந்த பணியில் வேகமாக இறங்கியுள்ளதாகவும், ஒரு வார காலத்திற்குள் புதுப்பிக்கப்படலாம் என்றும் அவர் பதிலளித்துள்ளார்.