Monday 21 October 2019

BSNL ஊழியர்களிடையே மகத்தான ஒற்றுமை உருவாகியது-மேலும் பல அமைப்புகள் AUABயில் இணந்துள்ளன

BSNLல் நெருக்கடி அதிகரித்து வருகிறது. எனவே ஊழியர்களிடையே பலத்த ஒற்றுமை கட்டப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம். BSNLல் ஒன்றுபட்ட தொழிற்சங்க இயக்கம் மட்டுமே, விரைவில் இந்த நிறுவனத்தின் பொருளாதார புத்தாக்கத்தை உறுதி செய்ய முடியும். கடந்த ஓரிரு வாரங்களாக, BSNLல் உள்ள அனைத்து முக்கியமான அமைப்புகளும் இந்த திசைவழியில் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டன. அவற்றின் விளைவாக மகத்தான ஒற்றுமை உருவாகி உள்ளது. தற்போது மேலும் பல அமைப்புகள் AUABயில் இணைந்துள்ளது. இது 11.10.2019 அன்று நடைபெற்ற AUAB கூட்டத்தில் பிரதிபலித்துள்ளது. இந்தக் கூட்டத்தில் BSNLEU, NFTE, SNEA, AIBSNLEA, FNTO, SEWA BSNL, BSNL MS, AIBSNLOA, TEPU, BSNLATM, BSNL OA, TOA BSNL மற்றும் BEA ஆகிய 13 அமைப்புகள் பங்கு பெற்றுள்ளன. அன்றைய கூட்டத்தில் கலந்துக் கொள்ள இயலாத இதர சங்கங்களையும், AUABக்குள் கொண்டு வரும் நோக்கத்தோடு அணுகுவது என்றும் அந்தக் கூட்டம் முடிவு செய்துள்ளது. ஊழியர்களின் ஒற்றுமையை மேலும் பலப்படுத்தும் நடவடிக்கைகளை தொடருவோம்.