Tuesday 16 July 2019

ஒப்பந்த ஊழியர்களின் ஊதியத்திற்கான தர்ணாவை வெற்றிகரமாக்கிடுவோம்!!

நாடு முழுவதும் BSNLல் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு கடந்த 6/7 மாதங்களாக ஊதியம் வழங்காத அவல நிலை நீடிக்கிறது. உடனடியாக அவர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என BSNL நிர்வாகத்தை வற்புறுத்தி 16.07.2019 அன்று BSNL ஊழியர் சங்கமும், TNTCWU அங்கமாக உள்ள BSNL CCWFம் இணைந்து மாநில தலைநகரங்களில் தர்ணா போராட்டம் நடத்த அறைகூவல் விட்டுள்ளன. அதனடிப்படையில் தமிழகத்தில் சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள தமிழ் மாநில தலைமை பொது மேலாளர் அலுவலகம் முன்பு பெருந்திரள் தர்ணா நடைபெற உள்ளது. BSNL ஊழியர் சங்கம் என்றும் ஒப்பந்த தொழிலாளர் பிரச்சனைகளில் அவர்களோடு இணைந்து களம் கண்டு வருகிறது. தற்போது இவர்களுக்கு 6/7 மாத கால ஊதியம் இல்லாததை கணக்கில் கொண்டு அவர்களது போக்கு வரத்து ஏற்பாடு உள்ளிட்ட விஷயங்களை நமது BSNL ஊழியர் சங்கம் உடன் இருந்து வழிகாட்ட வேண்டும் என்றும், இந்த போராட்டத்தில் நமது தோழர்களும் பெரும் அளவில் பங்கேற்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.