Wednesday 1 May 2019

BSNL நிறுவனத்திற்கு FINANCE, EB மற்றும் CM பிரிவுகளுக்கான தற்காலிக இயக்குனர்களை தொலை தொடர்பு துறை நியமித்துள்ளது.

FINANCE மற்றும் CM பிரிவுகளுக்கான இயக்குனர் பதவிகள் நீண்ட காலமாக காலியாகவே இருந்தது. DIRECTOR(EB) பதவி சமீபத்தில் காலியானது. இந்த காலிப்பணியிடங்களை நிரப்ப அரசாங்கம் உரிய காலத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் நிர்வாகத்தின் செயல்திறன் குறைந்தது. 2019 பிப்ரவரி 18 முதல் நடைபெற்ற மூன்று நாட்கள் வேலை நிறுத்தத்தின் ஒரு கோரிக்கையாக இந்த காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என AUAB முன்வைத்திருந்தது. 
இறுதியில் தற்போது அரசாங்கம் இடைக்காலமாக இந்த பணியிடங்களை நிரப்பி உள்ளது. திரு சுரேஷ் குமார் குப்தா அவர்களை DIRECTOR (FINANCE)ஆகவும், திரு பன்வாரிலால் வர்ஷ்னே அவர்களை DIRECTOR (EB)ஆகவும் திரு ஷீட்லா பிரசாத் அவர்களை DIRECTOR (CM)ஆகவும் கூடுதலாக கவனிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நிரந்தரமான இயக்குனர்கள் நியமிக்கப்படும் வரை அல்லது மூன்று மாத காலத்திற்கு இவர்கல் இந்த பதவிகளில் பணியாற்றுவார்கள்