Tuesday 2 October 2018

ஊழியர்களின் ஊதிய மாற்றத்திற்கான இணைந்தக் குழுவின் 5வது கூட்டம்

ஊழியர்களின் ஊதிய மாற்றத்திற்கான இணைந்தக் குழுவின் 5வது கூட்டம் அதன் தலைவர் திரு H.C.பந்த் அவர்களின் தலைமையில் 14.09.2018 அன்று நடைபெற்றது. இணைந்தக் குழுவின் அனைத்து உறுப்பினர்களும் கலந்துக் கொண்ட இந்தக் கூட்டத்தில், கடந்த கூட்டத்தில் நிர்வாகம் முன்மொழிந்த புதிய ஊதிய விகிதங்கள் தொடர்பான விவாதங்கள் நடைபெற்றது. ஒரு சில நடப்பில் உள்ள உதாரணங்களோடு புதிய ஊதிய விகிதங்களை விரிவாக பரிசீலித்ததாக தெரிவித்த ஊழியர் தரப்பு, அந்த ஊதிய விகிதங்கள் பெரும்பாலும் ஏற்றுக் கொள்ள தக்கதாக இருப்பதாக தெரிவித்தனர். எனினும், ஊழியர் தரப்பிற்கு கிடைக்கும் நடப்பு உதாரணங்களின் அடிப்படையில், ஊதிய மாற்றங்களில் ஏதேனும் மாற்றம் தேவையெனில் ஆலோசனை தெரிவிப்பதற்கு ஒரு வார கால அவகாசம் தேவையென கேட்டுக் கொண்டனர். இந்தக் கோரிக்கையினை நிர்வாக தரப்பு ஏற்றுக் கொண்டது. இந்த இணைந்தக் குழுவின் அடுத்தக் கூட்டம் 28.09.2018 அன்று நடைபெறும். 14.09.2018 அன்று நடைபெற்ற இணைந்தக் குழுவின் கூட்டம் முடிவடைந்த பின் ஊழியர் தரப்பு உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றது. அடுத்த இணைந்தக் குழுவின் கூட்டத்தில் விவாதிக்க வேண்டிய இதர பிரச்சனைகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக விவாதிக்க 25.09.2018 அன்று ஊழியர் தரப்பு உறுப்பினர்களின் கூட்டத்தை மீண்டும் கூட்டுவது என்றும் முடிவெடுக்கப்பட்டது.