BSNL ஊழியர் சங்கத்தின் மத்திய செயற்குழு அகர்தலாவில் 03.04.2018 முதல் 05.04.2018 வரை நடைபெறும் என BSNL ஊழியர் சங்கம் ஏற்கனவே நிர்வாகத்திற்கு கடிதம் கொடுத்துள்ளது. ஆனால் 36ஆவது தேசிய கவுன்சில் கூட்டத்தை 05.04.2018 அன்று நடைபெறும் என கார்ப்பரேட் நிர்வாகம் 15.03.2018 அன்று அறிவிப்பு கொடுத்துள்ளது. முதன்மை அங்கீகரிக்கப்பட்ட சங்கத்தின் மத்திய செயற்குழு நடைபெறும் தேதியில் தேசிய கவுன்சில் கூட்டத்தை நடத்துவதாக அறிவிப்பு கொடுத்துள்ளது என்பது கார்ப்பரேட் அலுவலகத்தின் SR பகுதியின் செயல்பாட்டை தெரிவிக்கிறது. நமது பொது செயலாளர் இவற்றை சுட்டிக்காட்டி, தேசிய கவுன்சில் கூட்டத்தை வேறு தேதிக்கு மாற்றியமைக்க வேண்டும் என கடிதம் கொடுத்துள்ளார்.