Friday 23 February 2018

சஞ்சார் பவன் நோக்கிய பேரணிக்கு தமிழக தோழர்கள்....

01.01.2017 முதல் ஊதிய மாற்றம் அமலாக்கப்பட வேண்டும், BSNL நிறுவனத்தை சீரழிக்கும் முயற்சியாக உருவாக்கப்பட்டுள்ள துணை டவர் நிறுவனத்தை திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக 23.02.2018 அன்று நடைபெற உள்ள சஞ்சார் பவன் நோக்கிய பேரணியில் தமிழ் மாநில BSNL ஊழியர் சங்கத்தின் சார்பாக 120க்கும் மேற்பட்ட தோழர்கள் பங்கேற்க உள்ளனர். திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் இருந்து தோழர்கள் சூசை மரிய அந்தோனி, மெய்யப்பன் கிறிஸ்டோபர், பழனிச்சாமி, சமுத்திரக்கனி ஆகிய தோழர்களின் தலைமையில் 18.02.2018 அன்று புறப்பட்டுள்ளனர். கோவை, தர்மபுரி, வேலூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து தோழர்கள் பாலசுப்ரமணியன், கிருஷ்ணன், பாபு ஆகிய தோழர்கள் தலைமையில் 19.02.2018 அன்று புறப்பட்டுள்ளனர். 20.02.2018, 21.02.2018 மற்றும் 22.02.2018 ஆகிய தேதிகளில் இதர பல மாவட்டங்களில் இருந்து தோழர்கள் புறப்பட உள்ளனர். பேரணியில் பங்கேற்க உள்ள தோழர்களுக்கு தமிழ் மாநில சங்கம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.