+2 முடிக்காமல் நேரடியாக பட்ட பெற்றவர்களை JE இலாகா தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என ஹைதராபாத் மத்திய நிர்வாக தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை பெற்ற தோழர்களுக்கு கடந்த JE இலாகா தேர்வில், இந்த தீர்ப்பு அமலாக்கப்பட்டு விட்டது. இந்த நிர்வாக தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்காலத்தில் வரும் JE இலாகா தேர்விலும் அமல்படுத்த வேண்டும் என BSNL ஊழியர் சங்கம் 37ஆவது தேசிய கவுன்சில் கூட்டத்தில் எழுப்பியது. அப்போது அந்த பிரச்சனையை கார்ப்பரேட் அலுவலகத்தின் ESTABLISHMENT பிரிவில் விவாதிக்கலாம் என பதிலளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் இந்த மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர் வரும் JE இலாகா தேர்வுகளிலும் அமலாக்க வேண்டும் என 23.01.2019 அன்று Sr.GM(Est) அவர்களுக்கு BSNL ஊழியர் சங்கம் கடிதம் எழுதியுள்ளது.