ஏற்கனவே அறிவித்தபடி 02.11.2018 அன்று மாலை DOT செயலாளர் மற்றும் AUAB தலைவர்களுக்கிடையேயான சந்திப்பு நடைபெற்றது. ஊதிய மாற்ற பிரச்சனையில் பெரிய முன்னேற்றம் ஏதும் இல்லை. ஆனால் 4G ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு, ஓய்வூதிய மாற்றம் மற்றும் ஓய்வூதிய பங்கீடு ஆகியவற்றில் சில முன்னேற்றங்கள் உள்ளன. DOT செயலருடன் நடைபெற்ற சந்திப்பிற்கு பின் நடைபெற்ற AUAB கூட்டத்தில் நவம்பர் 14 பேரணியை மிகவும் சக்தி மிக்கதாக நடத்திட முடிவெடுக்கப்பட்டது. விவரங்கள் நாளை இணைய தளத்தில் வெளியிடப்படும்.