ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL சார்பாக தோழர் P.அபிமன்யு GS BSNLEU, தோழர் K.செபாஸ்டியன் GS SNEA மற்றும் தோழர் பிரகலாத் ராய் GS AIBSNLEA ஆகியோர் DOT செயலாளர் திருமிகு அருணா சுந்தர் ராஜன் அவர்களை 20.02.2018 அன்று சந்தித்து நமது கோரிக்கைகளுக்கு தீர்வு காணும் படி வலியுறுத்தினர். குறுகிய காலம் நடைபெற்ற இந்த சந்திப்பில் நமது தலைவர்கள் 3வது ஊதிய மாற்றம் மற்றும் ஓய்வூதிய மாற்றம் தொடர்பாக குறிப்பாக வலியுறுத்தினர். நமது தலைவர்களின் கோரிக்கைகளை அக்கறையுடன் கவனித்த DOT செயலாளர், இது தொடர்பாக பரிசீலிப்பதாக உறுதி அளித்துள்ளார்.